- 2,000க்கும் மேற்பட்ட புதிய பணியாளர்கள் சேர்க்கப்படுவார்கள்
- தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு விதிக்கும்
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையில் ரெனோ-நிசான் டெக் வொர்க்ஸ்பேஸின் விரிவாக்கம் செய்யப்பட்ட பணிமனை திறப்பு விழாவில் கலந்துகொண்டு, புதிய தொழில்நுட்ப சேவைகளை அறிமுகப்படுத்தினார். சென்னையில் உள்ள இந்த தொழில்நுட்ப மையம், ரெனோ மற்றும் நிசான் கார் நிறுவனங்களின் மேம்பட்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
புதிய பணிமனை 1.38 லட்சம் சதுர அடி பரப்பில் அமைந்துள்ளது மற்றும் இதில் 2,000க்கும் மேற்பட்ட புதிய பணியாளர்கள் சேர்க்கப்படுவார்கள். இதன் மூலம், ரெனோ-நிசான் டெக் மையத்தின் மொத்த பணியாளர் எண்ணிக்கை அதிகாரிக்கும். இங்கு, ஆட்டோமேட்டிக் கார், எலக்ட்ரிக் கார் தொழில்நுட்பம் மற்றும் ஏஐ போன்ற முன்னேற்றங்களுக்கு முக்கிய மையமாகும்.
முதல்வர் ஸ்டாலின் உரையில், 'இந்த மையம் தமிழ்நாட்டின் தொழில்நுட்ப முன்னேற்றத்துக்கு மற்றுமொரு மைல்கல்லாகும்' என்று பாராட்டினார். மேலும், இத்தகைய நிறுவனங்கள் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பதை அவர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சி ரெனோ மற்றும் நிசான் நிறுவனங்களின் உயர் அதிகாரிகளின் முன்னிலையில் நடைபெற்றது, மேலும் இது தொழில்நுட்ப வளங்கள் மற்றும் வேலைவாய்ப்புகளின் வளர்ச்சிக்கு புதிய அடையாளமாக இருக்கும்.