- ஜூலை 16 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது எக்ஸ்டர் ஹை-சிஎன்ஜி டியோ
- இந்த செக்மெண்டில் ட்வின் சிஎன்ஜி சிலிண்டர் டெக்னாலஜியைப் பெற்ற முதல் கார் பஞ்ச்
ஹூண்டாய் நிறுவனம் ட்வின் சிஎன்ஜி சிலிண்டர்களுடன் கூடிய எக்ஸ்டர் காரை இந்திய சந்தையில் ஜூலை 16 அன்று அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் விலை ரூ. 8.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). ஹை-சிஎன்ஜி டியோ எனப்படும் புதிய டெக்னாலஜி சிங்கிள் சிஎன்ஜி சிலிண்டருடன் விற்கப்படும். மேலும், இந்த டெக்னாலஜி அதன் வரம்பில் உள்ள கிராண்ட் i10 நியோஸ் மற்றும் ஆரா போன்ற சிஎன்ஜி கார்களிலும் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.
இதில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், இந்த டெக்னாலஜியை கொண்டு வருவதில் ஹூண்டாய் நிறுவனம் மட்டும் இல்லை. முன்னதாக டாடா நிறுவனம் டியாகோ, டிகோர் மற்றும் எக்ஸ்டர் ஆகியவற்றுடன் போட்டியிடும் பஞ்ச் போன்ற கார்களில் இந்த டெக்னாலஜியை அறிமுகப்படுத்தியது. இருப்பினும், பி-எஸ்யுவி செக்மெண்ட்டில் வழங்கப்படும் இந்த இரண்டு கார்களின் டெக்னாலஜி விவரக்குறிப்புகளைப் பார்ப்போம்.
முதலில் எக்ஸ்டர் காரில் தொடங்கி, இந்த மாடல் 1.2 லிட்டர், பை-ஃபியூல் (பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி) மோட்டாருடன் 68bhp மற்றும் 95Nm டோர்க்கை உற்பத்தி செய்கிறது. அதேபோல, பஞ்ச் கார், அதன் சிஎன்ஜி வேரியன்ட்டில், 72bhp பவரையும், 95Nm டோர்க்கையும் உற்பத்தி செய்கிறது. இந்த இரண்டு கார்களும் ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் மட்டுமே கிடைக்கும்.
மைலேஜ் அடிப்படையில், டாடா பஞ்ச் ஐசிஎன்ஜி கிலோவுக்கு 26.99 கிமீ மைலேஜையும், ஹூண்டாய் எக்ஸ்டர் ஹை-சிஎன்ஜி கார் கிலோவுக்கு 27.1 கிமீ மைலேஜையும் வழங்குகிறது. இந்த இரண்டு சிஎன்ஜி கார்களின் மைலேஜில் சிறிய வித்தியாசம் இருந்தாலும், இரண்டு கார்களும் ஒரே மாதிரியான மைலேஜை வழங்குகின்றன. ஆனால், நாங்கள் உங்களுக்குச் சொல்லக்கூடியது என்னவென்றால், இந்த இரண்டு கார்களின் ரியல் வோர்ல்ட் மைலேஜை வரும் மாதங்களில் சோதித்து உங்களுக்கு தெரிவிப்போம்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்