- அடுத்த ஆண்டு இந்தியாவில் தொடங்கப்படலாம்
- இதில் 2.0 லிட்டர் டீஎஸ்ஐ டர்போ பெட்ரோல் உள்ளது
ஸ்கோடா கோடியாக் RS இப்போது சோதனையின் போது தென்ப்பட்டது, மேலும் அடுத்த ஆண்டு இந்தியாவில் நுழையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எஸ்யுவியில் சக்திவாய்ந்த 2.0 லிட்டர் டீஎஸ்ஐ டர்போ பெட்ரோல் இன்ஜின் இருக்கும், இது இன்னும் தனித்துவமாக்கும். இந்த ஆண்டு கோடியாக் RS இன் காப்புரிமைப் படங்களை நாங்கள் ஏற்கனவே பகிர்ந்துள்ளோம், இது அதன் கிடைக்கும் தன்மையை வெளிப்படுத்தியது.
புதிய ஸ்பை புகைப்படங்களில், RS பேட்ஜிங், புதிய வீல்கள் மற்றும் பெரிய ஸ்கோடா எழுத்துகளுடன் கூடிய ரியர் ஹேட்ச் போன்ற சில அருமையான விவரங்களைக் இது காட்டுகின்றன. இதனுடன், குரோம் எக்ஸாஸ்ட் டிப்ஸ், கனெக்டெட் டெயில்லைட்கள் மற்றும் ரெட் பிரேக் காலிப்பர்களும் தெரிகின்றன, இது இந்த காரை இன்னும் கவர்ச்சிகரமானதாக ஆக்குகிறது.
இன்டீரியரின் படங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை என்றாலும், முந்தைய RS மாடல்களைப் பார்க்கும்போது, RS பேட்ஜிங், கான்ட்ராஸ்ட்-கலர் சீட் பெல்ட்கள் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது ஒரு கோடியாக் என்பதால், இது த்ரீ ரோ சீட்ஸுடன் இருக்கும்.
கோடியாக் RS இந்தியாவிற்கு வரும் என்று நாங்கள் முன்பே எதிர்பார்த்தோம், ஆனால் இப்போது ரெகுலர் வெர்ஷனின் சோதனையைப் பார்த்தோம், ஸ்கோடா இந்த பர்ஃபார்மன்ஸ் வெர்ஷனையும் கொண்டு வரும் என்பது தெளிவாகிறது. ஸ்கோடா எப்போதும் அதன் RS மாடல்களுடன் சிறந்த பர்ஃபார்மன்ஸ் வழங்குகிறது மேலும் இவை குறைந்த எண்ணிக்கையில் மற்றுமே தயாரிக்கப்படும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்