- ஸ்கோடாவின் இந்த எஸ்யுவி அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வரவுள்ளது
- அக்டோபர்-2023 இல் இதன் செகண்ட் ஜெனரேஷன் அறிமுகமானது
புதிய ஸ்கோடா கோடியாக் மீண்டும் இந்தியாவில் சோதனையின் போது தென்ப்பட்டது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் 2025 கோடியாக்கின் விலைகளை ஸ்கோடா அறிவிக்கும் அதே வேளையில், அதற்கு முன்னதாக, இந்திய சந்தைக்கு வரும் செகண்ட் ஜெனரேஷன் எஸ்யுவியின் இன்ஜின் விவரக்குறிப்புகள் லீக் ஆனது.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஸ்பை ஷாட்ஸைப் பார்க்கும்போது, ஸ்கோடா கோடியாக் ரியர் கிளாஸில் அதிகாரப்பூர்வ ஸ்டிக்கரைப் பார்த்தால், காரில் 2.0 லிட்டர், ஃபோர் சிலிண்டர், டீஎஸ்ஐ பெட்ரோல் இன்ஜின் செவன்-ஸ்பீட் டிசிடீ கியர் பாக்ஸுடன் இணைக்கப்படும். இந்த இன்ஜின் 187bhp மற்றும் 320Nm டோர்க் திறனை வெளிப்படுத்தும். மேலும் என்னவென்றால், இங்கு நடக்கும் சோதனையில் ஸ்போர்ட் லைன் வேரியண்ட் யூனிட் பயன்படுத்தப்படுகிறது. அதாவது, இந்த கார் வெவ்வேறு வகைகளில் வழங்கப்படும் என்ற சிறிய துப்பும் கிடைத்தது.
எக்ஸ்டீரியரைப் பொறுத்தவரை, 2025 ஸ்கோடா கோடியாக் முற்றிலும் புதிய எக்ஸ்டீரியர் டிசைனைப் பெறுகிறது. கூடுதலாக, புதிய ஸ்பிளிட் ஹெட்லேம்ப்ஸ், சிக்னேச்சர் ஸ்கோடா கிரில் செங்குத்தாக அமைக்கப்பட்ட ஸ்லேட்ஸ், புதிய ஃப்ரண்ட் மற்றும் ரியர் பம்ப்பர்ஸ், புதிய அலோய் வீல்ஸ், சி-வடிவ எல்இடி டெயில் லைட், புதிய டெயில்கேட் மற்றும் பிளாக்-அவுட் ஓஆர்விஎம்’ஸ் போன்ற அம்சங்களை இந்த கார் பெறுகிறது.
மேலும், டூயல்-டோன் பிளாக் மற்றும் பிரவுன் தீமில் வரும் எஸ்யுவியின் இன்டீரியரைப் பொறுத்தவரை, இது 13-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10-இன்ச் ஃபுல் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஏடாஸ், ஆட்டோ-டிம்மிங் ஐஆர்விஎம் மற்றும் டூ-ஸ்போக் ஸ்டீயரிங் வீல் போன்ற சிறந்த அம்சங்களுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்