- அக்டோபர் 3 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும்
- 2 லட்சத்தில் முன்பதிவு செய்யலாம்
கியா இந்தியா தனது புதிய எம்பீவி உடன் இந்த பண்டிகை காலத்தில் விரைவில் இந்திய கார் சந்தையில் நுழைய தயாராகி வருகிறது. தகவலின்படி, அக்டோபர் 3 ஆம் தேதி கார்னிவல் நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட உள்ளது. ஆனால், அதற்கு முன்னதாகவே இந்த எம்பீவி வாங்குபவர்களிடமிருந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
சமீபத்தில் பிராண்ட் இந்த சொகுசு மாடலின் முன்பதிவுகளைத் தொடங்கியது, அதன் பிறகு 24 மணி நேரத்திற்குள் ஆயிரக்கணக்கான முன்பதிவுகள் பதிவு செய்யப்பட்டன. இதுவரை சுமார், 1,822 மாடல்களின் முன்பதிவுகளின் புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. இதுபோன்ற சூழ்நிலையில், இந்த பிராண்டின் கார் வாடிக்கையாளர்களால் மிகவும் விரும்பப்படுகிறது என்று சொன்னால் தவறில்லை.
இது குறித்து கியா இந்தியாவின் தலைமை விற்பனை அதிகாரி ஜுன்சு சாவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'இந்திய வாடிக்கையாளர்களிடம் இருந்து நாங்கள் பெற்ற அன்பிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அளிக்கும் விஷயம் ஆகும். புதிய கார்னிவலில் வழங்கப்படும் அம்சங்கள், டெக்னாலஜி மற்றும் அதன் லக்சுரி டிசைன் ஆகியவை வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்று நாங்கள் நம்புகிறோம்.
புதிய கியா கார்னிவல் EV9 உடன் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற சூழ்நிலையில், ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் ரூ. 2 லட்சம் டோக்கன் தொகையை செலுத்தி இந்த காரை முன்பதிவு செய்யலாம். இருப்பினும், கார்னிவல் விலையில் இன்னும் சந்தேகம் உள்ளது. இது ரூ. 45 முதல் 50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அம்சங்களைப் பற்றி பேசுகையில், இந்த புதிய கார்னிவல் பவர் ஸ்லைடிங் ரியர் டோர், டூயல் சன்ரூஃப், இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டருக்கான இரண்டு 12.3-இன்ச் டிஸ்ப்ளேக்கள், போஸின் மியூசிக் சிஸ்டம், லெவல் 2 ஏடாஸ் மற்றும் வென்டிலேடெட் ரியர் சீட்ஸ் போன்ற மேம்பட்ட அம்சங்களைக் காணலாம். புதிய கியா கார்னிவலில் 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் இருக்கும், இது எய்ட்-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் விருப்பத்துடன் இணைக்கப்படும். இந்த இன்ஜின் 191bhp மற்றும் 441Nm டோர்க் திறனையும் உற்பத்தி செய்யும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்