- ஆகஸ்ட் 15 ஆம் தேதி லான்சாகும்
- பனோரமிக் சன்ரூஃப், 360 டிகிரி கேமரா மற்றும் லெவல் 2 ஏடாஸ் ஆகியவற்றை பெறும்
இன்னும் சில நாட்களில், மஹிந்திரா அதன் தற்போதைய ஆஃப்-ரோடு எஸ்யுவியான தாரின் புதிய வெர்ஷன் தார் ரோக்ஸ் ஐ அறிமுகப்படுத்தும். இந்த ஃபைவ்-டோர் லைஃப்ஸ்டைல் எஸ்யுவி, 15 ஆகஸ்ட் 2024 அன்று இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. இதற்கு முன்னதாக, தார் ரோக்ஸின் புதிய நிறத்தை மஹிந்திரா வெளிப்படுத்தியுள்ளது.
படத்தில் தெரியும்படி, வரவிருக்கும் தார் ரோக்ஸ் ஒயிட் எக்ஸ்டீரியர் பெயின்ட்டில் முடப்பட்டிருந்தது. இது தற்போதுள்ள த்ரீ-டோர் தாரின் எவரெஸ்ட் ஒயிட் நிறமாக இருக்கலாம். இதற்கிடையில், முந்தைய டீசர் எஸ்யுவியின் பிளாக் எக்ஸ்டீரியர் நிறத்தை வெளிப்படுத்தியது.
எக்ஸ்டீரியர் சிறப்பம்சங்களைப் பொறுத்தவரை, புதிய தார் எக்ஸ்டென்டெட் வீல்பேஸ், பில்லாரில் பொருத்தப்பட்ட ரியர் டோர் ஹேண்டல்ஸ், புதிய ஸ்லாட் கிரில், 360 டிகிரி கேமரா மற்றும் வட்ட வடிவ டிஆர்எல்கள் எல்இடி ஹெட்லேம்ப்ஸுடன் கூடிய திருத்தப்பட்ட ஃப்ரண்ட் ஃபேஷியாவை பெறும்.
அம்சங்களுக்கு வரும்போது, முந்தைய டீசரில் பெரிய இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், ஹர்மன் கார்டன் ம்யூசிக் சிஸ்டம், புதிய ஸ்டீயரிங், வென்டிலேடெட் ஃப்ரண்ட் சீட்ஸ், ஒயிட் சீட் அப்ஹோல்ஸ்டரி, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் லெவல் 2 ஏடாஸ் ஆகியவை அடங்கும். அறிமுகப்படுத்தப்பட்டதும், தார் ரோக்ஸ் மாருதி ஜிம்னி மற்றும் ஃபைவ்-டோர் ஃபோர்ஸ் குர்கா உடன் போட்டியிடும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்