- இந்த ஆண்டில் இது இரண்டாவது முறையாக விலை உயர்வை பெறுகிறது
- இந்த மாதம் தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்ஸில் அதிக தள்ளுபடி வழங்கப்படுகிறது
ஹோண்டா கார்ஸ் இந்தியா தனது அனைத்து மாடல்களின் விலைகளையும் ஏப்ரல் 2024 முதல் அதிகரிக்கப் போகிறது. முன்னதாக, இந்த ஆண்டு ஜனவரியிலும், கார் உற்பத்தியாளர் தனது அனைத்து மாடல்களின் விலையையும் உயர்த்தியது, அதன் பிறகு இது இரண்டாவது விலை உயர்வு ஆகும்.
இந்தியாவில் ஹோண்டாவின் போர்ட்ஃபோலியோவில் தற்போது அமேஸ், ஃபிஃப்த் ஜெனரேஷன் சிட்டி, சிட்டி இஎச்இவி மற்றும் எலிவேட் ஆகியவை அடங்கும். எலிவேட் மற்றும் அமேஸின் விலைகள் முறையே ரூ. 11.58 லட்சம் மற்றும் ரூ. 7.16 லட்சத்தில் இருந்து தொடங்குகின்றன, அதே சமயம் சிட்டி மற்றும் சிட்டி இஎச்இவி’யின் விலைகள் ரூ. 11.71 லட்சம் மற்றும் ரூ. 18.89 லட்சம் (அனைத்து விலைகள், எக்ஸ்-ஷோரூம்)
மார்ச் 2024 இல் ஹோண்டா தனது வரம்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்களுக்கு பெரும் தள்ளுபடியை வழங்குகிறது. இம்மாதம் முதல் முறையாக எலிவேட்டில் ரூ. 50,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும், வாடிக்கையாளர்கள் சிட்டி மற்றும் அமேஸில் முறையே ரூ. 1.19 லட்சம் மற்றும் ரூ. 90,000 வரை சேமிக்கலாம்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்