- ஆகஸ்ட் 7 ஆம் தேதி தொடங்கப்படும், அதைத் தொடர்ந்து ஐசிஇ கர்வ் வழங்கப்படும்
- 55-56kWh பேட்டரி பேக்கைப் பெறும்
டாடா மோட்டார்ஸ் ஆனது கர்வ் கூபே எஸ்யுவியை ஆகஸ்ட் 7, 2024 அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. கர்வ் இவி வெர்ஷன் முதலில் அறிமுகப்படுத்தப்படும் என்றும், அடுத்த இரண்டு மாதங்களில் ஐசிஇ வெர்ஷன் அறிமுகம் செய்யப்படும் என்றும் எதிர்ப்பார்க்கிறோம். தற்போது, வாடிக்கையாளர்கள் டோக்கன் தொகையாக ரூ. 21,000 செலுத்தி கர்வ் இவியை புக் செய்யலாம். இந்தியா முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட டாடா அங்கீகாரம் பெற்ற டீலர்ஷிப்களில் புக்கிங் ஏற்றுக்கொள்ளப் படுகின்றன.
எங்கள் தகவலின்படி, டாடா கர்வ் இவி ஆனது 55-56kWh பேட்டரி பேக்கைக் கொண்டிருக்கும். இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 550 கிமீ தூரம் வரை டிரைவிங் ரேஞ்சை வழங்கும். இது ரியல் வோர்ல்ட்டில் 430-450 கிமீ மைலேஜை வழங்கும். இந்த புள்ளி விவரங்களுடன், கர்வ் இவி ஆனது மிகப்பெரிய பேட்டரி பேக் மற்றும் பிராண்டின் போர்ட்ஃபோலியோவில் மிக உயர்ந்த டிரைவிங் ரேஞ்ச் கொண்ட முதன்மையான ஃபுல்-எலக்ட்ரிக் வாகனமாக மாறும்.
மேலும், கர்வ் இவி ஆகஸ்ட் முதல் வாரத்தில் அதன் உடனடி அறிமுகத்திற்கு முன்னதாக இந்த மாத இறுதிக்குள் டீலர்ஷிப்களை அடையத் தொடங்கும்.
அம்சங்களைப் பொறுத்தவரை, வயர்லெஸ் ஸ்மார்ட்போன் கனெக்ட், ப்ரீமியம் சவுண்ட் சிஸ்டம், டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, ப்ளைன்ட் ஸ்பாட் மானிட்டருடன் கூடிய 360 டிகிரி கேமரா, பனோரமிக் சன்ரூஃப், புதிய ஃப்ரீ-ஸ்டாண்டிங் 12.5-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், ஸ்போக் ஸ்டீயரிங் வீல், ரீஜென் மோட்ஸ்கான பேடில் ஷிஃப்டர்ஸ் மற்றும் லெவல் 2 ஏடாஸ் போன்ற அம்சங்களுடன் கர்வ் வழங்கப்படும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்