- அக்டோபர் 3 ஆம் தேதி விலை அறிவிக்கப்படும்
- அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவு ரூ. 10 லட்சத்தில் தொடங்குகிறது
தேர்ந்தெடுக்கப்பட்ட கியா டீலர்ஷிப்களில் வரவிருக்கும் EV9 எஸ்யுவிக்கான ஆர்டர்களை எடுக்கத் தொடங்கியுள்ளன, இது அக்டோபர் 3, 2024 அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த புதிய ஃபுல் எலக்ட்ரிக் த்ரீ ரோ எஸ்யுவி ஐந்து வண்ண விருப்பங்களில் சிங்கிள் வேரியன்ட்டில் கிடைக்கும். 10 லட்ச ரூபாய் டோக்கன் தொகையை செலுத்தி வாடிக்கையாளர்கள் EV9 க்கு தங்களை பதிவு செய்து கொள்ளலாம்.
முன்பதிவு செய்த பிறகு, இந்த எஸ்யுவியின் டெலிவரி மார்ச் 2025 இல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கியா EV9 முழுமையாக இறக்குமதி செய்யப்பட்ட காராக இருக்கும் என்பதால், அது சிபியு வழியே இந்தியாவுக்குக் கொண்டுவரப்படும். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இறக்குமதி செய்யப்பட உள்ளது.
கியா EV9 ஆனது 99.8kW பேட்டரி பேக்குடன் பொருத்தப்பட்டிருக்கும், ஒரு முழு சார்ஜில் ஏஆர்ஏஐ சான்றளிக்கப்பட்ட 561 கிமீ டிரைவிங் ரேஞ்ச் கொண்டது. கூடுதலாக, இது 380bhp மற்றும் 700Nm டோர்க் உடன் AWD ஆக வழங்கப்படும்.
விலைகளைப் பற்றி பேசுகையில், EV9 விலை ரூ. 1 கோடிக்கு மேல் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இந்த விலையில், EV9 எஸ்யுவி ஆனது லேண்ட் ரோவர் டிஃபென்டர், வால்வோ XC90, ஆடி Q8, பிஎம்டபிள்யூ X5, ரேஞ்ச் ரோவர் வேலர், மெர்சிடிஸ்-பென்ஸ் GLE மற்றும் லெக்சஸ் RX போன்றவற்றுடன் போட்டியிடும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்